<p><b>விசைப்படகுகள் 1 மாத காலம் ஆகியும் கடலுக்கு செல்லாமல்&nbsp;</b><span style="font-weight: 700;">வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக&nbsp;</span><b>தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது</b>.</p><p>1000 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அலட்சியம் காட்டும் உதவி இயக்குநரின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக விசை படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அந்தோணிராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.&nbsp;</p><p><b>விசைப்படகு உரிமையாளர்கள் மீனவர் சங்க தலைவர் அந்தோணி ராஜ் அம்மனுவில் கூறியுள்ளதாவது</b>:&nbsp;<br></p><p>வேம்பார் துறைமுகத்தில் அரசின் அனுமதியோடு சுமார் 60 விசைப்படகுகள் நங்கூரமிட்டு 11கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்குதளம் அமைக்கப்பட்டு விசைப்படகுகள் தொழில் செய்து வருகின்றனர்.</p><p>'கடந்த மாதம் தருவைகுளம் நாட்டுப்படகு&nbsp; மீனவர்களுக்கும்,வேம்பார் விசைப் படகு மீனவர்களுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பினருக்கும் சேதாரம் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு ஏற்பட்டு மீண்டும் மீன்வளத்துறையின் உதவி இயக்குனரின் அனுமதியோடு&nbsp; நாங்கள் தொழில் செய்து வந்து கொண்டு இருக்கும் வேளையில், முன்று தினங்களுக்கு பின்னர், உதவி இயக்குநர் அவர்கள் வலை பிரச்சினை உள்ளது. அதை பேசி முடித்து விட்டு கடலுக்கு செல்லுங்கள் என கூறினார். </p><p>நாங்கள் இயக்குனரிடம் நேரில் சென்று விபரம்&nbsp; கேட்கும் போது சிப்பிகுளம்,கீழவைப்பர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வேம்பார் விசைப்படகு மீனவர்கள் மீது 11 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதம் அடைந்துள்ளது அதை பேசி முடித்து விட்டு தாங்கள் கடலுக்கு செல்லலாம் என கூறினார்.<br></p><p>சுமார் 30 தினங்கள் ஆகியும் இன்று வரை நாங்கள் கடலுக்கு செல்லவில்லை. இதற்கிடையில் சுமார் 10முறை மீன்துறை உதவி இயக்குனரை சந்தித்து பேசியும், எந்த வித பலனும் இல்லை. இறுதியாக கடந்த வியாழக்கிழமை அன்று&nbsp; மீன்துறை அதிகாரிகளிடன் புகார் அளித்தோம்.&nbsp;<br></p><p>பின்னர், 10.02 2021 அன்று காலை மீன்துறை உதவி இயக்குநர் அவர்களின் தலைமையிலும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையிலும், பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்பேச்சு வார்த்தையில் இறுதியாக 1,10,000 கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது. </p><p>அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். ஆனால் சிப்பிகுளம்,வைப்பார் மீனவர்கள் இதற்கு உடன்படவில்லை. </p><p>இதனால் இப்பிரச்சினை மீண்டு கொண்டே போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.<br></p><p>1 மாத காலமாக தொழிலுக்கு செல்லாமல் 1000 மீனவ குடும்பங்கள்&nbsp; பசியும், பட்டினியுமாக இருக்கிறோம். எங்களின் குடும்பத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பால் வாங்க கூட வழி இல்லாத சூழ்நிலையில் தற்போது ஆளாகி உள்ளோம்.&nbsp; </p><p>மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவில் தொழிலுக்கு அனுப்ப உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என அம்மன்னுவில் கூறியிருந்தார்.</p>