<p><b>இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, அக்டோபர் 28 அன்று தூத்துக்குடியில் பெண்கள் சுயஉதவிக் குழு பயனாளர்களுக்கு கடன் வழங்கும் விழாவை நடத்தியது.</b><br></p><p>பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில், குறிப்பாக தூத்துக்குடி சுற்று வட்டார மாவட்டங்களை மையமாகக் கொண்டு, புதிய சுய உதவிக் குழுக்களை (SHG) உருவாக்கி கடன் வழங்குவது.</p><p>இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வங்கியின் செயற்குழு இயக்குநர் கார்த்திகேயன்&nbsp; கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 400 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், சர்வோதயா அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ராஜனும் இதில் பங்கேற்றார்.</p><p>வங்கியின் களபொதுமேலாளர் (சென்னை) முகேஷ் சர்மா மற்றும் மதுரை மண்டல மேலாளர் கிஷோர் குமார் ஆகியோருக்கு, பேங்க் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி, காமநாயக்கண்பட்டி, கோவில்பட்டி மற்றும் இராமநாதபுரம் வங்கி&nbsp; பணியாளர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் சர்வோதயா குளுமமின் முதன்மை செயல் அலுவலர் ராஜன் மற்றும் அதன் பணியாளர்களும் பங்கேற்றனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/10/28/11730113593.jpg" style="width: 100%;"><br></p><p>சிறப்பு உரையில், செயற்குழு இயக்குநர் கார்த்திகேயன், சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, கடனுதவி வழங்குவதன் மூலம் பெண்களை வலுப்படுத்த வங்கியின்&nbsp; பங்களிப்பை விவரித்தார்.</p><p>சிறப்பு உரையில், செயற்குழு இயக்குநர் திரு. எம். கார்த்திகேயன், சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்குவதன் மூலம் பெண்கள் முன்னேற்றத்தில் வங்கியின் பங்களிப்பு குறித்து விவரித்தார்.</p><p>சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களில் தவறுதல் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதையும், தனிப்பட்ட பெண்கள் பயனாளர்களுக்கான 'ஸ்டார் சகி' என்ற திட்டங்களையும் பற்றி அவர் விளக்கினார்.</p><p>களபொதுமேலாளர் முகேஷ் சர்மா, PMSBY, PMJJBY, APY போன்ற மைய சேவைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.</p><p>ஆரம்பத்தில், வங்கி ஜூன் மாதத்தில் ரூ. 20 கோடி வரை கடனுதவி ஒப்புதலை வழங்கியிருந்தது. தற்போது மேலும் ரூ. 5 கோடி ஒப்புதலை இந்நிகழ்ச்சியின் மூலமாக வழங்கியுள்ளது. நிகழ்ச்சியில் பயனாளர்களுக்கு ஒப்புதல் கடிதங்கள் செயற்குழு இயக்குநர் கார்த்திகேயன் மூலமாக வழங்கப்பட்டன.</p>