புதியம்புத்தூரில் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் : சுகாதாரத்துறையினர் நடவடிக்கை!
நிருபர்
August 16, 2024
புதியம்புத்தூரில் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் : சுகாதாரத்துறையினர் நடவடிக்கை!
<p><b style="color: rgb(16, 74, 90);">தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் அருகே புதியம்புத்தூர் பஜாரில் டீக்கடை , பலசரக்கு, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளில் இன்று சுகாதார ஆய்வாளர்கள் தேவசுந்தரம் அருணாச்சலம், மானக்க்ஷா, ஆழ்வார்சாமி, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் முருகராஜ் ஆகியோர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் சோதனை மேற்கொண்டனர். </b><br></p><p><br></p><p>அப்போது காலாவதியான உணவு பொருள்கள் வைத்திருந்த மூன்று கடைக்காரர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் வைத்திருந்த மூன்று கடைக்காரர்களுக்கு அபராதமும் விதித்தனர். மேலும், காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.</p>