தூத்துக்குடி சிவன்கோவிலில் சமபந்தி விருந்து!
நிருபர்
August 15, 2024
தூத்துக்குடி சிவன்கோவிலில் சமபந்தி விருந்து!
<p><b>தூத்துக்குடி சிவன்கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.<br></b></p><p><br></p><p>இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சாா்பில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் அனைத்து திருக்கோவில்களிலும் சமபந்தி விருந்து நடத்த வேண்டும் என்ற உத்தரவிற்கிணங்க, தூத்துக்குடி சிவன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தை பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, ஜெயலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்து உணவருந்தினார்கள். நிகழ்ச்சியில் சிவன்கோவில் கணக்கர் சுப்பையா, பிரதோஷகமிட்டி நெல்லையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>