சாத்தான்குளம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை!
நிருபர்
August 09, 2024
சாத்தான்குளம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை!
<p><b>சாத்தான்குளம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். </b><br></p><p>சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மனைவி பஞ்சவர்ணம் (45). இவரது கணவர் கடந்த 18ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இந்நிலையில் இவரது ஓரே மகன் வசந்தகுமார், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. . இதனால் தாய் பஞ்சவர்ணம், மகன் தற்கொலை செய்து இடத்தை பார்த்து மிகவும் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனை பார்த்த அவரது சகோதரர் ராமசந்திரன் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பஞ்சவர்ணத்தை கவனித்து வந்துள்ளார். </p><p>இந்நிலையில் இன்று காலை பஞ்சவர்ணம், அவரது வீட்டிற்கு சென்று விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து ராமச்சந்திரன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>