செவல்குளம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கபாடி போட்டி!
நிருபர்
August 05, 2024
செவல்குளம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கபாடி போட்டி! Kabaddi tournament on the occasion of temple festival in Sewalkulam village
<p><b>ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் ஊராட்சி, செவல்குளம் கிராமத்தில் ஸ்ரீ கன்னி குலதெய்வம் ராமு கோவில் கொடை விழாவை முன்னிட்டு ராமு நண்பர்கள், செவல் ஃபைட்டர்ஸ் மற்றும் காளியம்மன் ஃபிரண்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாபெரும் மின்னொளி கபாடி போட்டி நேற்றிரவு நடைபெற்றது.</b></p><p>இதில், அரையிறுதி போட்டியை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பூசனூர் அணிக்கு ரூபாய் 12000 மற்றும் வெற்றி கோப்பையையும் யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/08/05/11722854135.jpg" style="width: 290.182px;"><br></p><p>இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி, ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால், ஓசநூத்து கருப்பசாமி, புதுப்பச்சேரி குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>