<p><b>கோவில்பட்டி அருகே மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு&nbsp; ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி ஊராட்சி மெய்த்தலவன் பட்டி கிராமத்தில், ஆதிதிராவிடர் மக்கள் குடியிருந்து வருகின்றார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகளான சுடுகாட்டுப் பாதை, குடிநீர் வசதி, சாலை வசதிகள் மற்றும் பாழடைந்த கிணற்றினை சீரமைக்கோரி&nbsp; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர், ஊராட்சி ஒன்றிய மேலாளர் அனந்தலெட்சுமிடம் மனு அளித்தனர்.&nbsp;</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/02/11719911596.jpg" style="width: 100%;"><br></p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>