<p><b>தூத்துக்குடியில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மின்சார ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;</b></p><p><br></p><p>தூத்துக்குடி சுந்தரவேல் புரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டி மகன் ஜோசப் (50).&nbsp; இவர் தனக்கு சொந்தமான&nbsp; மின்சார ஸ்கூட்டரில் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் உள்ள பேட்டரி தீ பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து அவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தினார்.&nbsp;</p><p><br></p><p>பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் க.கணேசன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் ந.நட்டார் ஆனந்தி&nbsp; மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.</p>