<p><b>100 நாட்களில் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும் என பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்து பேசினார்.</b></p><p>தமிழக சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.&nbsp; இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் முனைப்புடன் உள்ளன.<br></p><p>தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.&nbsp; அவர் பொதுமக்களிடையே பேசும்பொழுது, 100 நாட்களில் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதி கூறினார்.&nbsp; அப்படி குறைகளுக்கு தீர்வு இல்லையெனில் மக்களாகிய நீங்கள் கேள்வி கேட்கலாம் என்றும் கூறினார்.<br></p>