பாராளுமன்ற தேர்தல் : தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
நிருபர்
March 26, 2024
பாராளுமன்ற தேர்தல் : தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
<p><b>மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.</b><br></p><p>தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதிக்கு, திமுக வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். </p><p>இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். </p><p>அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>