<p><b>விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் எட்டையபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் எட்டையாபுரம் பேரூராட்சி உதவி நிர்வாக அதிகாரியிடம் அதிமுக சார்பில் மனு அளித்தனர்.</b></p><p><b style="color: rgb(74, 16, 49);">அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-</b></p><p>ஓவ்வொரு சனிக்கிழமையும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வியாபாரத்திற்காக ஆடுகளை ஏற்றி, எட்டையபுரம் ஆட்டுச்சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு சந்தையில்&nbsp; குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>ஆகவே, வியாபாரிகளுக்கு எட்டையபுரம் பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும், எங்களது கோரிக்கையை நிறைவேற்ற பேரூராட்சி நிர்வாகம் தவறும் பட்சத்தில் , அதிமுக&nbsp; எட்டையபுரம் பேரூர் கழகம் சார்பில் எட்டையபுரம் பேரூராட்சியை கண்டித்து&nbsp; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெருவித்துக்கொள்கிறோம்.</p><p>இதில், மகளிர் அணி செல்வி, சாந்தி, நகர அவைத் தலைவர் சேனா கணபதி, காட்டன் பிரபு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>