<p><b>பாவேந்தர் தமிழ் மன்றம் சார்பில், பொட்டலூரணி கிராமத்தில்&nbsp; திருவள்ளுவர் விழா நடைபெற்றது.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே&nbsp; உள்ள பொட்டலூரணி கிராமத்தில், பாவேந்தர் தமிழ் மன்றம் சார்பில் 28 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் மற்றும் திருவள்ளுவர் விழா நடைபெற்றது.<br></p><p>விழாவில், பொட்டலூரணி கிராம மன்றத்தின் செயலாளர் சங்கரநாராயணன் தலைமை வைக்கித்தார், மன்றத்தின் தலைவர் இராசா வரவேற்புரை ஆற்றினார்.<br></p><p>மன்ற உறுப்பினர் அழகுராசன் முன்னிலையில் நடைபெற்ற மாணவர் அரங்கம் நிகழ்ச்சியில், திருக்குறள் ஒப்புவித்தல்&nbsp; போட்டி, குறள் நெறிக் கதைகள் சொல்லும் போட்டி, பெருஞ்சித்திரனார் பாடல் ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி, கோலப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பங்கேற்ற&nbsp; மாணவர்களுக்கும் பரிசுகள்&nbsp; வழங்கப்பட்டன.&nbsp;&nbsp;<br></p><p>அதே போல், மன்ற உறுப்பினர் இராமகிருட்டிணன் முன்னிலையில் நடைபெற்ற அரசியல் அரங்க நிகழ்ச்சியில், அண்மையில் மறைந்த&nbsp; தமிழ்ப் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன், தனித்தமிழ் இயக்கப் போராளி தேன்மொழி அம்மையார், சமூக ஆர்வளர்&nbsp; வழக்குரைஞர் செம்மணி, கலைமாமணி கைலாசமூர்த்தி ஆகியோரின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/01/16/11610808778.jpg" style="width: 100%;"><br></p><p>உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவர் நிலவழகன், இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) இயக்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வழக்குரைஞர்&nbsp; இரமேஷ், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த சுஜித், உத்தரம் ஆகியோர் உள்ளிட்டோர்&nbsp; கலந்துகொண்டு விழா உரையாற்றினர்.<br></p><p>மன்ற உறுப்பினர் வெங்கடேசு முன்னிலையில் நடைபெற்ற பாராட்டு அமர்வில், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பொட்டலூரணியைச் சேர்ந்த ஆசிரியர் கோயில்பிச்சை அவர்களுக்கு ஆசிரியமணி என்ற விருது வழங்கப்பட்டது. மதியழகன் தலையிலான தாமிரபரணிக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.&nbsp;<br></p><p>விழாவில், தமிழாசிரியர் இராமசாமி, சைவ சபை கண்ணன், தொ.ப. மாசானமணி, பாளையங்கோட்டை கண்ணன், செல்வராசன் மற்றும் த ஊர் பொதுமக்கள் பலர்&nbsp; கலந்து கொண்டனர். முடிவில் தமிழாசிரியர் சங்கர் ராம் நன்றி கூறினார்.<br></p>