தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
நிருபர்
January 16, 2021
தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
<div align="left"><p dir="ltr"><b>வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.</b><br></p></div><div align="left">
<p dir="ltr">தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. பல இடங்களில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று தெரிகிறது.</p>
<p dir="ltr"><b>இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-</b></p>
<p dir="ltr">தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (சனிக்கிழமை) லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p dir="ltr">அதனைத் தொடர்ந்து வருகிற 18, 19-ந் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.<br>
</p></div>