<p><b>விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் வெறிநாய் கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, பேரூராட்சி அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது</b>.<br></p><p>விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இவைகள் தெருவில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. </p><p>நாய் கடியால் தினமும் பொதுமக்கள்&nbsp; பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனையடுத்து,&nbsp; வெறிநாய் கடி தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாத்திடவும், தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்தவும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.<br></p><p>கூட்டத்தில், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்,&nbsp; வட்டாட்சியர் ரகுபதி,காவல் ஆய்வாளர் ரமேஷ்,அரசு மருத்துவமணை மருத்துவர் பிரவீன் குமார், பேரூராட்சி செயல் அலுவலர்,கிளாக்,அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள்<br></p><p>விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.இரா.முனிய சக்தி ராமச்சந்திரன்,&nbsp; விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், நடராஜன், புதூர் ஒன்றியச் செயலாளர் ஞானகுரு சாமி<br></p><p>பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள்,&nbsp; வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.<br></p>