தூத்துக்குடி தொழில் அதிபரின் காரில் ரூ.25 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!
நிருபர்
December 30, 2022
தூத்துக்குடி தொழில் அதிபரின் காரில் ரூ.25 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!
<p><b>தூத்துக்குடி தொழில் அதிபரின் காரில் ரூ.25 லட்சம் கொள்ளையடித்தவழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். </b></p><p>தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). தொழிலதிபரான இவர் கடந்த 19-ந் தேதி நெல்லை கே.டி.சி. நகருக்கு வந்தார். அப்போது அவரது காரில் இருந்த ரூ.25 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். </p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த செல்வ சரவண கண்ணன் (25), நெல்லை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சிவக்குமார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்தை போலீசார் மீட்டனர். </p><p>இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியை சேர்ந்த முத்துகுமார், நெல்லை தியாகராஜநகரை சேர்ந்த விஜய் ஆகிய 2 பேரும் சேரன்மாதேவி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.</p><p> இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே மீதி பணமும் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.</p>