<p><b>தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.</b><br></p><p><b style="color: rgb(99, 0, 0);">இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: </b></p><p>2022-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 28.07.2022 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்” வைத்து  நடைபெற உள்ளது.  </p><p>எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>