<p><b>தாளமுத்துநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.</b><br></p><p>தூத்துக்குடி தாளமுத்துநகர் இந்திரா நகர், பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கனகராஜ் (22) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 16.03.2022 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.</p><p>இதனையடுத்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் மகன் பீர்முகம்மது (23) என்பவர் மேற்படி கனகராஜின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.</p><p>இதுகுறித்து தாளமுத்து நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா வழக்கு பதிவு செய்து&nbsp; பீர்முகம்மது என்பவரை கைது செய்து, மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 2,10,000/- மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.</p>