<p><b>தூத்துக்குடியில் சந்திரபாபு நினைவு தினத்தை முன்னிட்டு&nbsp;பரதர் நலசங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.</b></p><p>தூத்துக்குடி திரைப்பட துறையில் நகைச்சுவை நடிகராக திகழ்ந்த சந்திரபாபுவின் 48ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பரதர் நலசங்க அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>பொதுச் செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, அவை முன்னவர் சேவியர் வாஸ், செயலாளர் இன்னாசி ஆகியோர் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.<br></p><p>நிகழ்ச்சியில் ஜெயந்திராஜ், மனவை ரூஸ்வெல்ட், ஜெகன், சந்திரபாபு, ஞானம், பெசில், விஜயகுமார், ரெனோ, பரத், இன்சியா, உள்பட பலர் கலந்து கொண்டனர். </p><p>முன்னதாக பாத்திமாநகரில் புல்டன் ஜெசின் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>