<p><b>தூத்துக்குடி சிவன் கோவிலில் பாரத பிரதமர் நீண்ட ஆயுளுடன் வாழ பாஜக மகளிர் அணியினர் சிறப்பு வழிபாடு&nbsp; நடத்தினர்.</b></p><p>பஞ்சாப் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி&nbsp; பாதுகாப்பு குளறுபடியால் திரும்பிய விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.&nbsp;&nbsp;</p><p>இதனால் அவர் நலமுடன் இருக்க வேண்டி பாஜக&nbsp; மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் மகா மிருத்யுஞ்சய் ஜெபம் சென்னை கபாலீஸ்வரர் திரு கோவிலில் வைத்து நடத்தினார்கள்.&nbsp;&nbsp;</p><p>அதனை தொடர்ந்து நேற்று ( ஜனவரி 6 ) மாலை தமிழகம் முழுவதும் பாரத பிரதமர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டி&nbsp; சிறப்பு பூஜைகள் பாஜக மகளிர் அணி சார்பாக&nbsp; செய்யபட்டது.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திரு கோவில் மற்றும்&nbsp; தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் திருகோவிலிலும் மகளிர் அணி தலைவி&nbsp; தேன்மொழி&nbsp; தலைமையில்&nbsp; சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.</p>