”எனது பாடலுக்கு அற்புதமான குரலை வழங்கிய சிலம்பரசன் அண்ணாவுக்கு நன்றி: காளிதாஸ் ஜெயராம்
நிருபர்
July 09, 2021
”எனது பாடலுக்கு அற்புதமான குரலை வழங்கிய சிலம்பரசன் அண்ணாவுக்கு நன்றி: காளிதாஸ் ஜெயராம்
<p><b>நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள இண்டிபெண்டண்ட் ஆல்பம் ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடலை பாடிய சிலம்பரசனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம்</b>.<br></p><p>‘வானம்’ படத்திற்குப்பிறகு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘மாநாடு’ படத்தில் சிம்பு, யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளனர். இப்படத்தின், முதல்பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இண்டிபெண்டண்ட் ஆல்பம் ’தப்பு பண்ணிட்டேன்’ பாடலை சிம்பு பாடியுள்ளார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/07/09/11625821810.jpg" title="Vilasalnews" style="width: 100%;"><br></p><p> </p><p>சிம்பு பாடல் பாட, காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்பாடல் நேற்று மாலை வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், நடிகர் காளிதாஸ் ஜெயராம் சிலம்பரசனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/07/09/11625821818.jpg" title="Vilasalnews" style="width: 100%;"><br></p><p>அந்தப் பதிவில் “எனது பாடலுக்கு அற்புதமான குரலை வழங்கிய சிலம்பரசன் அண்ணாவுக்கு நன்றி” என்று தனது நன்றியை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் 4 வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yYz6Ov4LVT8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>