<p dir="ltr"><b>தூத்துக்குடியில் பாஜக ஐடி விங் மற்றும் சமூக ஊடகபிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.</b></p><p dir="ltr">பாஜக தெற்கு மாவட்ட, தூத்துக்குடி&nbsp; சட்டமன்றதொகுதி உட்பட்ட&nbsp; தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் இன்று பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து நடை பெற்றது. </p><p dir="ltr">கூட்டத்தில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளுதல், கட்சி வளர்ச்சி பணி உள்ளிட்ட&nbsp; பல்வேறு விஷயங்கள்<u> </u>தொடர்பாக கலந்துரையாடப்பட்டது . அதனைத்தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம் பிரிவு புதிய மாவட்ட செயலாளராக&nbsp; அமர்நாத்&nbsp; பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.</p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/07/04/11625400908.jpg" style="width: 100%;"><br></p><p dir="ltr">இக்கூட்டத்தில், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் பிரபு, தகவல் தொழில் நுட்ப மாவட்ட தலைவர் முரளிரத்தினம், மாவட்ட செயலாளர்கள் மனோகர்,&nbsp; கணேஷ், வடக்கு மண்டலத் தலைவர் காளிராஜா, துணை தலைவர்கள் சங்கர், கணேஷ், கலைசெல்வன் செயலாளர்கள் கருப்பையா, கார்த்திக், சுரேஷ், </p><p> </p><p dir="ltr">கிழக்கு மண்டல தலைவர் ஜெயக்குமார், துணை தலைவர்கள் வினோத், கணேஷ், செயலாளர் முத்து லெட்சுமணன், மேற்கு மண்டல துணை தலைவர் சரத்குமார், செயலாளர்கள்&nbsp; சிவராமன், இசக்கி பாண்டியன், முத்துக்குமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.<br> </p>