<p dir="ltr"><b>விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 60 மூட்டை ரேஷன்&nbsp; அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.</b><br></p><p dir="ltr">தூத்துக்குடி மாவட்ட காவல்&nbsp; கண்காணிப்பாளர்&nbsp; ஜெயக்குமார்&nbsp; உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும்&nbsp; வாகன சோதனை&nbsp; நடைபெற்று வருகிறது.</p><p dir="ltr">அதன்படி&nbsp; விளாத்திகுளம் காவல் துணை&nbsp; கண்காணிப்பாளர்&nbsp; பிரகாஷ்&nbsp; மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (30.06.2021) விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்வ மரத்து பட்டி&nbsp; பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு&nbsp;&nbsp; சந்தேகத்திற்கிடமாக வந்த TN39 H&nbsp; 5099 என்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 50&nbsp; கிலோ எடையுள்ள 60 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/07/01/11625100788.jpg" alt="ரேஷன் அரிசி கடத்தல் - விளாத்திகுளம் " style="width: 100%;"><br></p><p> </p><p dir="ltr">உடனடியாக போலீசார் அந்த வாகன ஓட்டுனரான ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காமராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ் மகன் ராம செல்வம் (34)&nbsp; என்பவரை கைது செய்து,&nbsp; மேற்படி வாகனத்தையும், ரேசன் அரிசி&nbsp; மூட்டைகளையும் பறிமுதல் செய்து&nbsp;&nbsp; தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.<br>&nbsp; &nbsp; &nbsp;</p>