தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு!!
நிருபர்
June 28, 2021
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு!!
<p dir="ltr"><b>தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தகராறு செய்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.</b><br></p><p dir="ltr">இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்கம் சார்பில் வழக்கறிஞர்கள் நாகராஜ், விக்டர் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:</p><p dir="ltr">கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா எனும் பெருந்தொற்று நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தி<u>யா </u>மற்றும் தமிழகமும் விதிவிலக்கின்றி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கொரோனா பாதிப்பிற்குள்ளாகும் நோயாளிகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் பிராணவாயு (oxigen) உற்பத்தி செய்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது. அதற்காக ஸ்டெர்லைட் நிறுவனம் எந்த ஒரு கட்டணமோ, விலையோ யாரிடமும் பெறுவதில்லை.</p><p dir="ltr">மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.2கோடி மதிப்புள்ள கருவிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் சிலர் உண்மை நிலையை மறைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என பொதுமக்களை திசைதிருப்ப போராட்டம் மற்றும் கலவரங்களை உருவாக்கி வருகிறார்கள். </p><p>
</p><p dir="ltr">சில தினங்களுக்கு முன்னர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிலர், ஸ்டெர்லைட் நிறுவன பதாகையை அப்புறப்படுத்த வேண்டும் என தகராறு செய்ததோடு பணியிலிருந்த ஊழியர்களையும் பணி செய்ய விடாமல் மிரட்டியுள்ளார்கள். </p><p dir="ltr">எனவே, மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறிப்பிடப்பட்டிருந்தது.</p>