பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி!
நிருபர்
June 16, 2021
பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி!
<p><b>பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் தொடங்கியது.</b><br></p><p>சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வினை மருத்துவமனை இயக்குனர் விஜயா இன்று தொடங்கி வைத்தார்.</p><p><b>பின்னர் அவர் செய்தியாளரிடம் தெரிவிக்கையில் :</b></p><p>முதற்கட்டமாக 9 தாய்மார்களுக்கு கோ வாக்சின் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தாங்கள் பரிந்துரைக் கிறோம். அதற்கான ஆணைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என கூறினார்.</p><div><br></div>