• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு தாசில்தார் பலி

  • Share on

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு தாசில்தார் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் தங்கசீலன் (வயது 52). இவர், தூத்துக்குடி மாவட்ட அரசு கேபிள் டி.வி. தாசில்தாராக பணியாற்றி வந்தார்.  இவர் இதற்கு முன்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாசில்தாராக பணியாற்றி உள்ளார்.

ராஜ்குமார் தங்கசீலனுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ராஜ்குமார் தங்கசீலன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது உடல் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி உடனடியாக அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

தாசில்தார் மறைவையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது உருவபடத்துக்கு ஆட்சியர் செந்தில்ராஜ், வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி  ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • Share on

எழுத்தாளர் கி.ராஜநாயணன் உடலுக்கு கனிமொழி எம்பி; அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி

  • Share on