
தூத்துக்குடியில் நிலத்தரகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் ஒளிமுத்து மகன் முருகன் (68). நிலத்தரகராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக அவரது மகன் முனியசாமி லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.