• vilasalnews@gmail.com

ரூ.40 லட்சம் கொடுத்த தூத்துக்குடி பெரியவர்.... உங்க இடத்தில் செல்போன் டவர் போட்டால் வருமானம் கொட்டும்!

  • Share on

செல்போன் டவர் அமைத்து அதன் மூலம் வருமானம் பெறலாம் என நில உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பி  ஆசை வார்த்தை கூறி ரூபாய் 40,22,000 பணத்தை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அவரது செல்போனில் தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி  வந்துள்ளது.


இதனையடுத்து மேற்படி முதியவர்  அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் தான் ஒரு தள பொறியாளர் என்றும் உங்களது நிலத்தில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெற்றுத் தருவதாக கூறி மேலும் சில நபர்களை முதியவருக்கு அறிமுகப்படுத்தி, செல்போன் டவர் அமைப்பதற்கு ஆவண கட்டணம், பொருட்கள் செலவு, போக்குவரத்து கட்டணம், நியமன கட்டணம் போன்ற பல்வேறு காரணங்களை கூறியுள்ளனர். 


இதனையடுத்து மேற்படி முதியவர் அந்த மர்ம நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி ரூபாய் 40,21,950 பணத்தை செல்போன் டவர் அமைப்பதற்காக கொடுத்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த முதியவர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.


மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சென்னை அமிஞ்சிகரை பகுதியைச் சேர்ந்த சுப்பாராவ் மகன் முரளிகிருஷ்ணன் (51) என்பவர் மேற்படி முதியவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது.


இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார்  முரளிகிருஷ்ணனை கடந்த 25.03.2025 அன்று சென்னையில் வைத்து கைது செய்து நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

விளாத்திகுளத்திற்கு 40.79 கோடி நிதி ஒதுக்கீடு!

தூத்துக்குடியில் புதிய 10 வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம்!

  • Share on