• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சிறுமியை தீ வைத்து உருக்குலைத்த கொடூரன்கள் கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள ஒரு தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 


அதில், இவர்களது 17 வயது மகளும், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் பழகி வந்துள்ளனர். இதனையடுத்து, தங்களது மகளை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து சிறுமி, சந்தோஷ் என்பவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.


மேலும் சிறுமியை எட்டயபுரம் அருகே உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு, பெற்றோர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி அங்கு வந்த 2 இளைஞர்கள் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனராம்.


சிறுமி மீது தீ பற்றி உயிருக்கு போராடிய சிறுமி மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், மருத்துவமனையில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், அவரை கொலை செய்ய முயன்றது பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எட்டயபுரம் போலீசார் சந்தோஷ், முத்தையா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடி காவல் நிலையத்தில் குவிந்த பாஜகவினர்!

எட்டயபுரத்தில் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்ட 10 பேருக்கு போலீசார் எச்சரிக்கை!

  • Share on