• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதில் சிக்கல் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சாலை ஓரங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், சிறிய விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகத் உத்தரவிட்டுள்ளார்.


தூத்துக்குடி நெடுஞ்சாலை கோட்டத்திற்குட்பட்ட உட்கோட்டங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் நடை மேடைகள், நடைபாதைகள், அனைத்து வகையான சாலைகளின் ஓரங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் சிறிய விளம்பர டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரபலகைகள் கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகத் உத்தரவிட்டுள்ளார்.


இதையடுத்து, நெடுஞ்சாலை கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து வகையான விளம்பர பலகைகள் அகற்றப்பட்டதற்கான விரிவான அறிக்கை மற்றும் அகற்றப்பட்ட விளம்பர பலகைகள் குறித்த விவரங்களை உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து உதவிக் கோட்டப்பொறியாளர்களுக்கு கோட்டப்பொறியாளர்  ஆறுமுகநயினார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

  • Share on

உண்மை தன்மை தெரியாமல்... மறுப்பு தெரிவித்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை!

சொத்து வரி உயர்வு... தூத்துக்குடி மாநகராட்சிக்கு குட்டு வைத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை!

  • Share on