• vilasalnews@gmail.com

துப்பாக்கியோடு இருங்கள் : தூத்துக்குடி எஸ்பி உத்தரவு!

  • Share on

வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றது. இதில் சிறப்பாக பயிற்சி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.


தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் வைத்து இன்று (22.02.2025) தூத்துக்குடி மாவட்ட  த்தில் உள்ள நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்பாக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு முதலிடம் பிடித்து  தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்ஸி, 2ம் இடம் பிடித்த மணியாச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் 3வது இடம் பிடித்த கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர்  தமிழ்செல்வன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கி  பாராட்டினார்.


மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்ட்டி ரவுடி டீம் (Anti Rowdy Team) காவல்துறையினர் குற்ற பட்டியலிடப்பட்ட இடங்களில் ரவுடிகளை கண்காணித்தும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணியை மேம்படுத்துமாறு அறிவுரைகள் வழங்கி, ரோந்து பணியின்போது காவல்துறை அதிகாரிகள் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம் மற்றும் தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வி.மீரா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

கடலூரில் காங்கிரஸ் எம்.பி., தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகள்... பரபரப்பான சிறிது நேரம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா : ஓட்டப்பிடாரத்தில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

  • Share on