• vilasalnews@gmail.com

பொதுமக்களை நாளை சந்திக்கிறார் தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும்  புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (29.01.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துள்ளனர்.


இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் மற்றும் காவல் நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் தெரிவிக்கலாம் என்பதனையும் மாவட்ட காவல்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

திருச்செந்தூர் முருகன் கோயில் கருவறை... அத்துமீறிய துணை நடிகர்!!

தூத்துக்குடிக்கு நாளை வருகிறார் நடிகை தர்ஷா குப்தா!

  • Share on