
ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 23.01.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 23.01.2025 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட அனைத்து குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.