• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் 2024ல் காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கொலை குற்ற சம்பவங்கள் குறைவு - மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 2024ல் காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்தது.


கொலை குற்ற வழக்குகள் : (Murder Case)


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2024) காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது.


அதன்படி கடந்த 2023 ஆண்டுடன் ஒப்பிடும்போது 6% கொலை வழக்குகள் குறைவாகவும், 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 18% குறைவாகவும் பதிவாகியுள்ளது.

 

காய வழக்குகள் (Hurt Case)


மேலும் காயவழக்குகளில் இந்த ஆண்டுடன் கடந்த 2023 ஆம் வருடத்தை ஒப்பிடும்போது 2024ஆம் ஆண்டு 34% கொடுங்காய வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.


போக்சோ வழக்கு தீர்ப்புகள் (Pocso Conviction)


அதே போன்று போக்சோ வழக்ககுகளில் தண்டனை விகிதம் கடந்த 2023 ஆண்டு 10% ஆக தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் 25%  தீர்ப்புகள் அதிகரித்துள்ளது.

     

கொலை வழக்கு தீர்ப்புகள் (Murder Case Conviction)


தண்டனை விகிதம் கடந்த 2023 ஆம் ஆண்டு 7% ஆக தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் 2024ஆம் ஆண்டு காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 50% ஆக  தீர்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நீங்க இதை கவனிச்சீங்களா?

தூத்துக்குடியில் ஒரு வருடத்தில் நடந்த அசாத்திய மாற்றம்.. வியந்த மக்கள்!

  • Share on