
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் கிராமத்தில் நேற்று 28 ஆம் தேதி இரவு மலைப்பாம்பு ஒன்று நடமாடுவதாக தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அங்கு சாலையின் ஓரத்தில் சுற்றி திரிந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து வல்லநாடு மலைப்பகுதியில் விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.