• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on

விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ரமேஷ் (25). இவர் விளாத்திகுளத்தில் இருந்து எப்போதும் வென்றானுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த டிராக்டர பைக் மீது மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த வட மாநிலத்தை சேர்ந்த நபுகுல் இஸ்லாம் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் உழவு பணியின் போது கலப்பையில் சிக்கி டிராக்டர் டிரைவர் பரிதாபமாக உயிரிழப்பு!

தூத்துக்குடி அருகே விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவன் திடீர் மாயம்!

  • Share on