• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்ப்புள்ள பீடி இலை பண்டல்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடியில் இருந்து கடல் பகுதி வழியாக இலங்கைக்கு தொடர்ந்து அவ்வப்போது பீடி இலைகள், மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறார். இதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் காவல் துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், நேற்று இரவு தூத்துக்குடி தாளமுத்து நகர் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்த இருப்பதாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் சைரஸ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் தாளமுத்து நகர் கடல் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையை கண்டதும் கடத்தல் கும்பல் தப்பி ஓடிய நிலையில், அங்கே இருந்த ஒரு வேனை சோதனை செய்தனர். 

அந்த வேனில் 40 பண்டல்களில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1500 கிலோ பீடி இலைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், பீடி இலைகளை கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

ஓட்டப்பிடாரம் அருகே சந்திரகிரி கிராமத்தில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு!

  • Share on