• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட காவல்துறை வாகனங்கள் ஜூலை 15ஆம் தேதி ஏலம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 11 வாகனங்களுக்கு வரும் 15.07.2024ம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 11 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 15.07.2024 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம்  நடைபெற உள்ளது.

மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 14.07.2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 14.07.2024 அன்றே ரூபாய் 2000 முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ரூ.18% முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பான விவரங்களுக்கு 9498194611, 9498196359 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

  • Share on

இரட்டை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

ஏரல் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கியவரை போலீசில் பிடித்து ஒப்படைத்த தாசில்தார்!

  • Share on