• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஆடு திருடிய இளைஞர் கைது - திருடப்பட்ட ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள ஆடு மீட்பு!

  • Share on

தூத்துக்குடி டி.சவேரியார்புரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சேவியர் ஜெகன் (45) என்பவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7.7.2024 அன்று  தனது ஆடுகளை வீட்டில் முன்பு உள்ள ஆட்டை கட்டி வைத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்த போது அதில் ஒரு ஆடு காணாமல் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து சேவியர் ஜெகன் அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த செட்டிபெருமாள் மகன் சரவணக்குமார் (23) என்பவர் சேவியர் ஜெகனின் ஆட்டை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி வழக்குபதிவு செய்து சரவணகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20,000 மதிப்புள்ள ஆட்டையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

எட்டயபுரம் அருகே பாலத்தில் வேன் மோதி விபத்து - 3 சிறுவர்கள் உட்பட 14 பேர் காயம் - போலீசார் விசாரண!

இரட்டை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

  • Share on