• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3,50,000 பண மோசடியில் ஈடுபட்டவர் கைது - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

  • Share on

தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3,50,000 பண மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி மற்றும் நல்லநம்பி, மணிகண்டன் ஆகியோரிடம் தூத்துக்குடி கோரம்பள்ளம் மாதவன் நகர் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் மகன் வீரபாண்டியன் (59) என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி நம்பிக்கை ஏற்படுத்தி மேற்படி தமிழ்ச்செல்வியிடம் ரூபாய் 1,50,000 பணமும், நல்லகண்ணு என்பவரிடம் ரூபாய் 1,50,000  பணமும், மணிகண்டன் என்பவரிடம் ரூபாய் 2,00,000 லட்சம் பணமும் என மொத்தம் ரூபாய் 5 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.

இதனையடுத்து கூறியபடி வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பி கொடுக்குமாறு தமிழ்ச்செல்வி, நல்லகண்ணு மற்றும் மணிகண்டன் ஆகியோர் மேற்படி வீரபாண்டியனிடம் கேட்பதற்கு அவர் ஆளுக்கு தலா ரூபாய் 50,000 ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு மீதி ரூபாய் 3,50,000 பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி தமிழ்ச்செல்வி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு  மேற்பார்வையில், மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளர்  முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் காவலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி வீரபாண்டியனை கடந்த 05.07.2024 அன்று கைது செய்து, தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

விளாத்திகுளம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பெரியப்பா கைது!

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவன மேலாளரிடம் வெளிநாட்டிற்கு கண்டெய்னர்கள் அனுப்பும் புக்கிங் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் கைது!

  • Share on