• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பெரியப்பா கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அருங்குளம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் கணேசன் (42).

இவர் எந்த வேலைக்கு செல்லாமல் ஊருக்குள் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  தனது மகள் உறவுமுறை கொண்ட 9 வயது சிறுமிக்கு  தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதனை அந்த சிறுமியின் தாய் பலமுறை கணேசனை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டி துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியின் தாய் கணேசன் மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கணேசனை (POSCO)சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில்அடைத்தனர். 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பெரியப்பா முறை கொண்ட நபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே பெயிண்டர் திடீர் மாயம் - மணியாச்சி போலீசார் விசாரணை!

தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3,50,000 பண மோசடியில் ஈடுபட்டவர் கைது - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

  • Share on