• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் வடக்கு தெரு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கொடை விழா - பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

  • Share on

சாத்தான்குளம் வடக்கு தெரு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வடக்கு தெரு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கொடை விழா ஐந்து நாள் வெகு விமர்சையாக நடைபெறும். இதில் முதல் நாள் அழகம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இரண்டாவது நாள் காலையும் மாலையும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகத்தில் முளைப்பாறியை வைத்து அப்பகுதி பெண்கள் கும்மி அடித்து சுவாமியை வழிபட்டனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சுவாமிகள் தலையில் கும்பம் எடுத்து அப்பகுதி பெண்களும் தலையில் முளைப்பாரியை வைத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து இறுதியில் கோயில் வளாகம் வந்தடைந்தது. 


கோயில் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக பூக்குழி நடைபெற்றது. இதற்காக அருகில் இருந்த விநாயகர் கோவிலில் இருந்து சுவாமி தீச்சட்டி ஏந்தி மாரியம்மன் ஆலயத்திற்கு வந்து சுவாமியே வழிபட்டு கோயில் முன்புறம் அமைத்துள்ள பூக்குழியில் சுவாமி அருளுடன் ஒருவருக்கு பின்னால் ஒருவராக பூக்குழியில் இறங்கினார்கள். அதன் பின்னர் நள்ளிரவு சாமிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம மக்கள்  கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்.

  • Share on

ஸ்ரீவைகுண்டம் : திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்!

ஓட்டப்பிடாரம் அருகே பெயிண்டர் திடீர் மாயம் - மணியாச்சி போலீசார் விசாரணை!

  • Share on