• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மது போதையில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடியில் மது போதையில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 


தூத்துக்குடி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுடலைமணி (29). இவர் தினசரி மதுபானம் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது வீட்டுக்குள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். 


இதனையடுத்து, அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் : போலீசார் குவிப்பு!

கோவில்பட்டி அருகே மலையில் பற்றி எரிந்த தீ - நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

  • Share on