• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் - துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த  செல்வராஜ் என்பவரின் மகள் மாரியம்மாள் (40), இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், மாரியம்மாளுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது, இதனால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும் பலன் கிடைக்காத நிலையில், விரக்தியில் இருந்து வந்த  மாரியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார் மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாரியம்மாளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • Share on

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் நினைவுத்தூன் - யாதவ மகாசபை நிறுவனத் தலைவர் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தார்!

மெஞ்ஞானபுரம் : கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது - கஞ்சா மற்றும் 2 பைக் பறிமுதல்!

  • Share on