• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் : நாளை ( ஜூலை 6 ) மின்தடை அறிவிப்பு

  • Share on

ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/11கே.வி ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையம் மற்றும் 33/11 கே.வி ஒட்டநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால், நாளை  ( 6.7.2024 ) சனிக்கிழமை அன்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி ஓட்டப்பிடாரம் துணை மின் நிலைய பகுதிகளான,

ஓட்டப்பிடாரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர், ஓசனூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், பாஞ்சாலங்குறிச்சி, தெற்கு வீரபாண்டியபுரம், வெள்ளாரம், ஆவரங்காடு, க.சுப்பிரமணியபுரம்,  அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம் மற்றும் அதனை  சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஒட்டநத்தம் துணை மின் நிலைய பகுதிகளான சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம் , பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம், சண்முகபுரம் , மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன் , சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக்கோட்ட, ஐரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப்பண்ண, கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி , கோவிந்தாபுரம், கொல்லன்கிணறு, மருதன்வாழ்வு, T.ஐயப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் கொன்று புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு!

கோவில்பட்டியில் திடீர் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

  • Share on