• vilasalnews@gmail.com

மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகில் இருந்து கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி மீனவா் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தாா்.

தூத்துக்குடி இனிகோநகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் சுதாகர் (வயது 27). இவர் நேற்று முன்தினம் மிக்கேல் அந்தோணி என்பவருக்கு சொந்தமான படகில், அவரது தந்தை சுரேஷ், உரிமையாளர் மிக்கேல் அந்தோணி ஆகியோருடன் மீன்பிடிக்க சென்றுள்ளார். அவர்கள் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனராம்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சுதாகர்  கடலுக்குள் தவறி விழுந்து விட்டாராம். உடனடியாக அக்கம் பக்கத்தில் படகில் இருந்தவர்கள் விரைந்து தவறி விழுந்த சுதாகரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில்  கடலோர பாதுகாப்பு போலீசார், சுதாகரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

இந்திய சுதந்திர போராட்டம் வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்!

பொட்டலூரணி கிராம மக்கள் தொடர் போராட்டம்... மீன் கழிவு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு!

  • Share on