• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி அழகு நிலையத்தில் வெளிமாவட்ட பெண்களை வைத்து விபச்சாரம் : ஒருவர் கைது - 3 இளம்பெண்கள் மீட்பு!

  • Share on

தூத்துக்குடியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபச்சாரம் நடத்தியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் தூத்துக்குடி கணேஷ் நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு விபசாரம் நடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அங்கு  பாண்டிச்சேரி, திருப்பூர், கோவை பகுதிகளைச் சேர்ந்த பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக குமரி மாவட்டம், குளச்சல் கொட்டில்பாடு  பணியடிமை மகன் சேவியர் ஸ்டாலின் சிபு (24) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அழகு நிலைய உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து தென்பாகம் காவல் ஆய்வாளர் ( பொ )பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வந்துள்ளது இந்த புதிய வசதி!

தூத்துக்குடியில் மனைவி - மகள் காணவில்லை : கணவர் போலீசில் புகார்!

  • Share on