• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

  • Share on

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்குகளில்  சம்மந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்முறை செய்த வழக்கில் கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் மாரிமுத்து (25) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அதேபோன்று கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை சிலம்பம் கற்று கொடுப்பதாக கூறி கடந்த ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் நாலாட்டின்புதூர் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த சிலம்பம் ஆசிரியரான மாரியப்பன் மகன் மாரிக்கண்ணன் (44) என்பவரையும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட  மாரிமுத்து மற்றும் மாரிக்கண்ணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் 1) மாரிமுத்து மற்றும் நாலாட்டின்புதூர் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் 2) மாரிக்கண்ணன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

  • Share on

தூத்துக்குடியில் இயங்கும் அரசு, தனியார் பள்ளிகளில் கழிவறை வசதிகள் : சுகாதார துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்!

திருச்செந்தூர் முருகனை நம்பினோர் கைவிடப்படார்.... கடலில் தவறவிட்ட 5 சவரன் தங்க செயின் பக்தருக்கு மீண்டும் கிடைத்தது!

  • Share on