• vilasalnews@gmail.com

ஆத்தூர் அருகே வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

  • Share on

ஆத்தூர் அருகே வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார் நேற்று (29.11.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு ஆத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் பழையகாயல் ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்மபாண்டி மகன் முத்துப்பாண்டி (24) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார்  முத்துபாண்டியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட  முத்துபாண்டி மீது ஏற்கனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் வழிப்பறி, கஞ்சா விற்பனை உட்பட 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

கட்டுமான பணியில் சேவைக் குறைபாடு : ஒப்பந்தகாரர் 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தை சுற்றி முளைக்கும் திடீர் நடைபாதை கடைகளால் போக்குவரத்து நெருக்கடி - நடவடிக்கை எடுக்குமா போக்குவரத்து காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும்?

  • Share on