• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இளைஞர் கைது

  • Share on

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில்  கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  சுரேஷ் மேற்பார்வையில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின் மற்றும் போலீசார் நேற்று (04.07.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மில்லர்புரம், பாரதிநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் செல்வம் (19) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் செல்வத்தை கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே சரக்கு வாகனத்தை திருடிய 2 பேர் கைது!

விளாத்திகுளம் அருகே ஆடுகள் திருடிய 3 பேர் கைது

  • Share on