• vilasalnews@gmail.com

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் செயின் திருட்டு - துாத்துக்குடி பெண்கள் 3 பேர் கைது!

  • Share on

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் ஏழு பவுன் செயின் திருடியதாக துாத்துக்குடியை சேர்ந்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே அனந்தநாடார்குடியை சேர்ந்தவர் சுனிதா 39. இவர் அம்மாண்டிவிளைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்த போது இவரது கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்க செயின் மாயமாகியிருந்தது. அவர் கொடுத்த புகாரில் ராஜாக்கமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய மூன்று பெண்கள் பற்றி சந்தேகம் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் வாகன சோதனை நடத்திய போலீசார் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த துாத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த பிரியா (எ) தேவயானை 29, நதியா (எ) மாரீஸ்வரி 24, பிரியா (எ) ஈஸ்வரி 25, ஆகிய மூவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர்.

உயர்ந்த ஆடைகள் அணிந்து பஸ்களிலும், பஸ் ஸ்டாண்டுகளில் நின்று செயின், பர்ஸ் திருடும் அவர்கள் சுனிதாவிடம் செயின் திருடியது விசாரணையில் தெரிய வந்தது. மூவரும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்!

தூத்துக்குடியில் பத்து அம்ச கோரிக்கைகளை விலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

  • Share on